வேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு

வேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு
வேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு

உரிய விளக்கம் அளித்ததால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் தொகுதி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில், வேலூர் மக்களவை தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,   வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது, பணப்பட்டுவாடா புகார் இருப்பதால், அவர் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக உறுப்பினராக இல்லாமல் ஏ.சி.சண்முகம் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என சில வேட் பாளர்கள் கேள்வி எழுப்பியதால் அவர் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளித்ததை அடுத்து, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com