வேலூர்: 10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி இளைஞரின் வாகனத்தை பறித்த பங்க் ஊழியர்கள்

வேலூர்: 10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி இளைஞரின் வாகனத்தை பறித்த பங்க் ஊழியர்கள்
வேலூர்: 10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி இளைஞரின் வாகனத்தை பறித்த பங்க் ஊழியர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனக்கூறி பெட்ரோல் போட வந்தவரின் வாகனத்தை பங்க் ஊழியர்கள் பறித்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.

முல்லை பாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பில் இருந்த 25 ஏக்கர் நிலத்தை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச உதவி கேட்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்திக்கச் சென்ற ஸ்ரீகாந்த், தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட அருகில் இருந்த பெட்ரோல் பங்கை அணுகினார். 50 ரூபாய்க்கு பெட்ரோல்போட பணம் கொடுத்த நிலையில் அதில் இருந்த பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது எனக்கூறி ஸ்ரீகாந்த்தின் வாகனத்தை பங்க் ஊழியர்கள் பறித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com