வேலூர்: 4 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்

வேலூர்: 4 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்
வேலூர்: 4 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்

விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்தில் தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தை இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் (CRPF-Y) மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ஜெயந்தி (29) மற்றும் அவரது 4 வயது பெண் குழந்தை நந்திதாவும் கீழ் விலாச்சூரில் வசித்து வந்தனர்.


இந்நிலையில் தாய் ஜெயந்தி மற்றும் 4 வயது பெண் குழந்தை இருவரும் இன்று அதிகாலை விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்தில், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் தாய், மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com