வேலூர்: பரோலில் சென்ற ஆயுள் கைதி தலைமறைவு; காவல் நிலையத்தில் சிறைத்துறை புகார்

வேலூர்: பரோலில் சென்ற ஆயுள் கைதி தலைமறைவு; காவல் நிலையத்தில் சிறைத்துறை புகார்
வேலூர்: பரோலில் சென்ற ஆயுள் கைதி தலைமறைவு; காவல் நிலையத்தில் சிறைத்துறை புகார்

தாய்க்கு உடல்நிலை சரியில்லை என 5 நாள் பரோலில் சென்ற கைதி தலைமறைவாகியுள்ளார். சிறைதுறை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் விருப்பாச்சிபுரம், வாணியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவர், தனது 19-வயதில் கடந்த 2012-ம் ஆண்டு ஓட்டேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரை நகைக்காக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  2017-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என 5 நாள் பரோல் கேட்டு கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு சென்றுள்ளார். 19-ம் தேதி மாலையோடு பரோல் முடிந்து சிறைக்கு வரவேண்டியவர், இதுவரை சிறைக்கு வராததாலும், வீட்டிலும் ஆள் இல்லாததால் அவர் தலைமறைவாகியதாக வேலூர் மத்திய சிறைத்துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறையின் புகாரையடுத்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com