டியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

டியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

டியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

வேலூரில் டியூசன் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாததால் தேடிச்சென்ற தந்தை, தனது மகன் சடலமாக கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்தி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகாமையில் டியூசன் சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை டியூசன் புறப்பட்டுச் சென்ற கார்த்தி, இரவு வரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த நரசிம்மன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகனை தேடினார். இரவு முழுவதும் தேடியும் மகன் கிடைக்கவில்லை என்பதால், மகனின் வருகையை எதிர்நோக்கி நரசிம்மன் காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கார்த்தி ஏரியில் மிதப்பதாக சிலர் நரசிம்மனிடம் தெரிவித்துள்ளனர். உடனே ஏரியில் சென்று பார்த்த நரசிம்மன், தனது மகன் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கார்த்தியின் உடலை மீட்டனர். பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறையினர், உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் தண்ணீர் எடுக்கும் வாளியைக் கொண்டு கார்த்தி விளையாடியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் நரசிம்மன் கூறும்போது, தனது மகனை யரோ? அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com