வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 26 வகையான பறவைகள் வந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சரணாலயத்துக்கு ஆஸ்திரேலியா, பர்மா , பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெள்ளை நிற அரிவாள் மூக்கன் ,கூழைகடா, முக்குளிப்பான், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புதாரா, சிறவி, போன்ற பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இருந்த போதிலும் கடந்த வருடத்தை விட குறைவாகவே பறவைகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.