முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என தமிழக அரசு தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் இது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேதா இல்லம் ஜெயலலிதாவி்ன் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.