திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை: திருமாவளவன்

திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை: திருமாவளவன்
திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை: திருமாவளவன்

திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என  விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிபங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, பாமக உடனான கூட்டணியை உறுதிப்படுத்தி 23 சீட்டுகளை வழங்கியுள்ளது. பாஜக கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. பிற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என்று கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு பிரேத்யமாக பேட்டியளித்த அவர், திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை. மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி என்றும் திமுக கூட்டணையில் விசிக தொடர்ந்து பயணிக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com