திருவாரூர்: பட்டா வழங்க லஞ்சம் - ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டால் கையும் களவுமாக சிக்கிய விஏஓ

திருவாரூர்: பட்டா வழங்க லஞ்சம் - ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டால் கையும் களவுமாக சிக்கிய விஏஓ
திருவாரூர்: பட்டா வழங்க லஞ்சம் - ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டால் கையும் களவுமாக சிக்கிய விஏஓ

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவராக பணி புரிபவர் பாலசுப்பிரமணியன். இவர், ஆனைவடபாதி பகுதியைச் சேர்ந்த மனோஜ் பாபு என்பவரிடம் பட்டா வழங்க ரூபாய் 21 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூபாய் 3 ஆயிரம்  மட்டும் பணம் கொடுத்த மனோஜ்பாபுவிடம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் மொத்த தொகை கொடுத்த பின்னர் பட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் லஞ்சம் கேட்ட தகவலை திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் மனோஜ்பாபு  புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் 18 ஆயிரம் பணத்தை மனோஜ்பாபு வசம் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க கொடுத்து அனுப்பினர். மனோஜ்பாபு வசம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் லஞ்ச பணம் ரூ.18 ஆயிரம் பெற்றபோது அலுவலகத்தின் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை திருவாரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் லஞ்ச ஒழிப்பு  காவல்துறையினர் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலரை பிடித்தனர் .

பிடிபட்ட அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் வசம் விசாரணை நடைபெற்று வருகிறது, லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com