ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரம்
ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரம்pt desk

வாணியம்பாடி | இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரம்!

வாணியம்பாடி அருகே ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேர் இன்று பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐடி ஊழியரான ஆனந்த் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இதில், ஆனந்திற்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை அங்கிருத்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரம்
காவல் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

இதையடுத்து இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com