வாணியம்பாடி: தவறான சிகிச்சையால் 13 வயது சிறுவன் உயிரிழப்பு! போலி மருத்துவர் கைது!

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானியம்பாடி அருகே தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற 13 வயது சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய பெற்றோர் அருகில் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். நாயனசெருவு பகுதியை சேர்ந்த கோபிநாத் என்ற போலி மருத்துவர், சிறுவனின் உடல்நிலையை சரிபார்த்து சிகிச்சையளித்து ஊசி போட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்த சிறுவனுக்கு உடல்நிலை மோசமான நிலையில், அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததை அடுத்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com