வந்தவாசி: இடி விழுந்ததில் வீட்டின் மாடி சுவர் இடிந்து விபத்து-மின் பொருட்கள் எரிந்து நாசம்

வந்தவாசி: இடி விழுந்ததில் வீட்டின் மாடி சுவர் இடிந்து விபத்து-மின் பொருட்கள் எரிந்து நாசம்
வந்தவாசி: இடி விழுந்ததில் வீட்டின் மாடி சுவர் இடிந்து விபத்து-மின் பொருட்கள் எரிந்து நாசம்

வந்தவாசி அருகே இடி விழுந்ததில் வீட்டின் மாடி சுவர் இடிந்து விழுந்தது வீட்டிலிருந்த மின்சார மீட்டர்கள், சுவிட்ச் பாக்ஸ், எரிந்து நாசம். வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த நிலையில் நள்ளிரவு வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான காண்டீபன் என்பவரின் வீட்டின் மாடியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்ததில் வீட்டின் மாடியில் இருந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. அதன் விளைவால் வீட்டின் உள்ளே இருக்கும் மின்சாதன பொருட்களான மின் மீட்டர் கருவிகள், சுவிட்ச், பேன், ஆகியவை எரிந்து கருகியது. மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் காண்டிபன் கூறும் போது, நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த இடி இடித்தது.பின்னர் வீட்டின் மாடியில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்ததில் வீட்டின் மாடி சுவர் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின் சாதன பொருட்கள் குறித்த பாதிப்பு விவரங்கள் தெரியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் வந்தவாசி பகுதியில், 72.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com