”என் ஜாமீனை ரத்து செய்து, என்னை மீண்டும் சிறையில் அடையுங்கள்”- வாளையார் மனோஜ் கோரிக்கை மனு

”என் ஜாமீனை ரத்து செய்து, என்னை மீண்டும் சிறையில் அடையுங்கள்”- வாளையார் மனோஜ் கோரிக்கை மனு
”என் ஜாமீனை ரத்து செய்து, என்னை மீண்டும் சிறையில் அடையுங்கள்”- வாளையார் மனோஜ் கோரிக்கை மனு
கோடநாடு  கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாளையார் மனோஜ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள வாளையார் மனோஜ், உதகையில் தனக்கு இருப்பிடமும், உணவும் கிடைக்கவில்லை என்பதால் தனது சொந்த ஊரான கேரளாவில் இருந்து வழக்கிற்கு ஆஜராக அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ‘புலன் விசாரணை’ என்று கூறி அரசுத்தரப்பு வழக்கு விசாரணையை தங்கள் விருப்பத்திற்கு காலம் தாழ்த்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இப்படியான சூழலில் தன்னுடைய ஜாமினை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறையில் அனுப்பக் கோரி இன்று அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரிப்பதாக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com