கலிங்கப்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகள் படை: நடவடிக்கைக்கு வைகோ வலியுறுத்தல்

கலிங்கப்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகள் படை: நடவடிக்கைக்கு வைகோ வலியுறுத்தல்

கலிங்கப்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகள் படை: நடவடிக்கைக்கு வைகோ வலியுறுத்தல்
Published on

கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,''தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளன. இதுகுறித்து, விவசாயிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். வேளாண்துறை அதிகாரிகள் நேற்று வருகை தந்து ஆய்வு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியருடன் தான் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ள வைகோ, ஆட்சியர் விரைவில் அப்பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசின் விவசாயத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் உன உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ள வைகோ, பிடிபட்ட வெட்டுக்கிளிகளை எடுத்துக்கொண்டு விவசாயிகள், இன்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com