கோடை விடுமுறையில் மாணவர்கள் அனைவரும் கிராம மக்களை ஒன்று திரட்டி சீமைக்கருவைகளை அகற்ற வேண்டும் என மாணவர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு போராடுவது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்று, சீமைக்கருவை மரங்களை அகற்றுவதற்கும் மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.