\
வைகை அணையிலிருந்து நீர் திறப்பு 2,569 கனஅடியாக உயர்வு

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு 2,569 கனஅடியாக உயர்வு

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு 2,569 கனஅடியாக உயர்வு
Published on

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு, 2 ஆயிரத்து 569 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 3,457 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 6,798 மில்லியன் கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com