வடகாட்டில் போராட்டம் ஒத்திவைப்பு

வடகாட்டில் போராட்டம் ஒத்திவைப்பு
வடகாட்டில் போராட்டம் ஒத்திவைப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாட்டில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21 நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்த வடகாடு மக்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கிராம மக்கள் அறிவித்தனர். நல்லாண்டார்கொல்லையில் நடந்து வந்த போராட்டமும் நேற்று வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com