தடுப்பூசி போட்டு உயிரை காப்போம்: விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ள உளுந்தூர்பேட்டை ஓவியர்கள்

தடுப்பூசி போட்டு உயிரை காப்போம்: விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ள உளுந்தூர்பேட்டை ஓவியர்கள்
தடுப்பூசி போட்டு உயிரை காப்போம்: விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ள உளுந்தூர்பேட்டை ஓவியர்கள்

உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு ஓவிய சங்கம் சார்பில் "தடுப்பூசி போட்டுக் கொள்வோம், உயிரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்ற வாசகத்துடன் கொரோனா ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு ஓவியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி நோய் பயம் இல்லாமல் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர்.

இதனால் தமிழ்நாடு ஓவிய சங்கம் சார்பில் கொரோனா நோயால் ஏற்படும் ஆபத்தை விளக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை ஓவியர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள சுவற்றில் "தடுப்பூசி போட்டுக் கொள்வோம், உயிரை பாதுகாப்போம்", "முகக் கவசம் அணிவோம்" என வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com