தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் நாளை முதல் அனுமதி

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் நாளை முதல் அனுமதி
தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் நாளை முதல் அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கவுன்டரில் சமர்ப்பித்து டிக்கெட் மற்றும் பாஸ் பெற வேண்டும் எனவும், ஏற்கனவே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர் டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது 2 தவணை தடுப்பூசிக்கான சான்றிதழை காட்ட வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மொபைல் செயலி வழியாக வரும் 31 ஆம் தேதி வரை புறநகர் ரயிலுக்கான டிக்கெட்களை பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத பயணிகளிடமிருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com