பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்: சசிகலா அறிவிப்பு

பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்: சசிகலா அறிவிப்பு

அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ எனக் கூறினார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டியை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் போயர்ஸ் கார்டனில் சசிகலா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அந்த பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com