உசிலம்பட்டி பெண் சிசு மரணம் - பெற்றோர் கைது

உசிலம்பட்டி பெண் சிசு மரணம் - பெற்றோர் கைது
உசிலம்பட்டி பெண் சிசு மரணம் - பெற்றோர் கைது

மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு மரணம் தொடர்பாக பெற்றோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு பெண்குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி அந்தக் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து வீட்டின் அருகிலேயே புதைத்தனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் 29-ஆம் தேதி, புதைத்த பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதன்பின்னர் முத்துப்பாண்டி கௌசல்யா ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com