கருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார்

கருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார்

கருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார்
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 10ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த சில தினங்களாக எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை. அதனால், கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற கருத்தும் நிலவியது. 

ஆனால், இன்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இன்று மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்புகளை ஒத்துழைக்க வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனிடையே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காவேரி மருத்துவமனைக்கு வந்த நிதின் கட்கரி, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உடன் இருந்தனர். முன்னதாக, குடியரசு தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலன் விசாரித்து சென்றனர்.

இதனிடையே, காவல்துறை அதிகாரிகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை செய்து வருகிறார். சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆணையர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com