அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து: ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து: ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து: ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் பலி

குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (23). இவர், குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், நாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பணியில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com