கார் தீப்பிடித்தது: சீட் பெல்டை கழற்ற முடியாததால் தொழிலதிபர் பலி!

கார் தீப்பிடித்தது: சீட் பெல்டை கழற்ற முடியாததால் தொழிலதிபர் பலி!

கார் தீப்பிடித்தது: சீட் பெல்டை கழற்ற முடியாததால் தொழிலதிபர் பலி!
Published on

கோவை அருகே கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில், சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால் தொழிலதிபர் உடல் கருகி இறந்த தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

கொச்சியை சேர்ந்தவர் திலீப்குமார் (38). இவர் மனைவி ஆஷா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திலீப்குமார் கர்நாடக மாநிலம் கோலாரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். விடுமுறை காலங்களில் குடும்பத்துடன் கொச்சியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் காரில் கொச்சி புறப்பட்டார். கோவையை அடுத்த மதுக்கரை சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை கார் வந்த போது திடீரென்று பழுதானது. காரை ஸ்டார்ட் செய்தபோது முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே திலீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காரைவிட்டு இறங்க சொன்னார். 

பின்னர் அவர் மீண்டும் ஸ்டார்ட் செய்த போது திடீரென்று தீப்பிடித்தது. உடனே திலீப்குமார் காரை விட்டு வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் வெளியேற முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த மனைவி ஆஷா, திலீப்குமாருடன் இணைந்து பெல்ட்டை கழற்ற முயன்றார். முடியவில்லை.

இதையடுத்து ஆஷாவும், குழந்தைகளும் அலறினார்கள். இதைக்கேட்டு சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். திலீப்குமாரையும் மீட்க முயன்றனர். ஆனால் தீ  பற்றி எரிந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் திலீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே தீயில் கருகினார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், திலீப்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com