திருவாரூர் இடைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?- குவிந்த விருப்ப மனுக்கள்

திருவாரூர் இடைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?- குவிந்த விருப்ப மனுக்கள்

திருவாரூர் இடைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?- குவிந்த விருப்ப மனுக்கள்
Published on

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. அமமுக சார்பில் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்  எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று மாலை தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, பூண்டி கலைவாணன் போட்டியிட 15 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருவாரூரில் போட்டியிட தனித் தனியாக 9 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.  

இதனால், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திரைத் துறையில் பயணித்து வரும் உதயநிதி, சமீப காலமாக திமுக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com