ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - 13 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் மீட்புப்பணி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - 13 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் மீட்புப்பணி
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - 13 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் மீட்புப்பணி

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 68 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது. கிணற்றில் விழுந்தபோது 26 அடியில் இருந்த குழந்தை, மீட்புப் பணியின்போது கீழே சென்றதால் சிக்கல் ஏற்பட்டது.
       

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காலை 7:30 அல்லது 8 மணிக்குள் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துவிடுவார்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com