Tragedypt desk
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி: பழைய கட்டடத்தை இடித்த போது சுவர் விழுந்து இரண்டு தொழிலாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
கிருஷ்ணகிரி அருகே பழைய கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செய்தியாளர்: ஜி.பழனிவேல்
கிருஷ்ணகிரி அருகே எம்.சி.பள்ளியில் உள்ள பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது, அப்போது வீட்டின் சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. சுவர் இடிபாடுகளில் சிக்கிய எம்.சி.பள்ளி காலனியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்களான அண்ணாமலை மற்றும் ரவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Old buildingpt desk
இது குறித்து தகவல் அறிந்த மகாராஜா கடை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு தொழிலாளிகளின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.