நகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு

நகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு
நகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு

மதுரையில் நகை வாங்குவது போல் நடித்த இரண்டு பெண்கள் நகையை திருடியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

மதுரை மேலமாசி வீதி பகுதியில் அமைந்திருக்கும் செந்தில் முருகன் நகை கடைக்கு நேற்று நகை வாங்குவது போல் ஆட்டோவில் இரண்டு பெண்கள் வந்துள்ளனர். வெகுநேரமாக நகை வாங்குவது போல் விற்பனையாளரை ஏமாற்றி ஒரு பெண் விற்பனையாளரிடம் பேச்சு கொடுத்து அவருடைய கவனத்தை திசை திருப்பியுள்ளார், அந்த நேரத்தில் மற்றொரு பெண் கடையில் இருந்து 60 கிராம் எடை உள்ள டாலர் வடிவத்திலான நகையை திருடி, தனது ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார், 

அந்தப் பெண்கள் சென்றதும், நகைக்கடை ஊழியர்கள் நகைகளை சரிபார்த்தபோது, 60 கிராம் நகை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி கேமராக்களை பரிசோதித்து பார்த்தபோது, அந்த பெண்கள் நகையை எடுத்து ஆடைக்குள் மறைத்து வைக்கும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக நகைக்கடை உரிமையாளர் தெற்கு வாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் நகையை திருடிச்சென்ற இரண்டு பெண்களையும் தேடிவருகிறார்கள். மேலும் கடையின் வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com