கட்டுப்பாட்டை இழந்த கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்து - இருவர் பலி

கட்டுப்பாட்டை இழந்த கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்து - இருவர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்து -  இருவர் பலி

மதுராந்தகம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் படாளம் காவல் நிலையம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதிய கார் எதிர் திசையில் சென்றுள்ளது. அப்போது சென்னையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற டேங்கர் லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தலை ஞாயிறு பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் (31), வினோபாரதி (37) என்ற பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த படாளம் போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com