கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததால் சோகம் : ‘விஷவாயு’ தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததால் சோகம் : ‘விஷவாயு’ தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததால் சோகம் : ‘விஷவாயு’ தாக்கி இரு தொழிலாளர்கள் பலி
Published on

சென்னை அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு தொழிலாளர்கள் விஷவாயு உயிரிழந்தனர்.

சென்னை நொளம்பூர் அருகேயுள்ள ரெட்டி பாளையம் சாலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருக்கும் பெரிய கழிவுநீர் தொட்டியை, இரும்பு கம்பிகளைக் கொண்டு மூடும் பணியில் பாடி என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த கண்ணன் (45) மற்றும் பிரகாஷ் (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கம்பிகளை வெல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, பிரகாஷ் என்பவர் திடீரென நிலை தடுமாறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதைப் பார்த்த கண்ணன், அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் தொட்டிக்குள் விழுந்த இருவரும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அங்கிருந்த பிற தொழிலாளர்கள் இதைக்கண்டு, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த அம்பத்தூர் தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com