கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை இழுத்துச் சென்ற அலை

கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை இழுத்துச் சென்ற அலை

கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை இழுத்துச் சென்ற அலை
Published on

கடலில்  குளித்துக் கொண்டிருந்த இரு கல்லூரி மாணவர்களை இழுத்துச் சென்ற அலை. அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை கடலில் நேற்று மதியம் சோழிங்கநல்லூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள் 6 பேர் குளிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அனைவரும் கடற்கரை அலையில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் அலையில் சிக்கி திலக்சன், மற்றும் சஞ்சித் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து உடனிருந்த நண்பர்கள் அவர்களை தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. பின்னர் நீலாங்கரை மற்றும் கடலோர போலீசார் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த அவர்கள் தேடி பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்றும் இருவரின் உடலும் கிடைக்காத நிலையில், இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com