இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி

இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி

இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி
Published on

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை வேலாண்டிப்பாளையம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் வேகமாக வந்த போது எதிர்ப்பாராத விதமாக நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தபோது அங்கிருந்த ஒருவர் தனது செல்ஃபோனில் நிகழ்வை படம் பிடித்துள்ளார். இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்களில் இருந்து மூன்று பேர் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. புத்தாண்டின்போது நடைபெற்ற இந்தத் துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com