செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கொளம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (27), சூரியா (30), கணேசன் (35), ரமேஸ்(49) மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கத்தை சேர்ந்த செவமணி (28), லெட்சுமணண் (30) ஆகிய 6 பேர் ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு டவேரா காரில் சென்றுள்ளனர். நேற்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். காரை கணேசன் என்பவர் ஓட்டியுள்ளார். அவரே காரின் உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது.