சாலையில் தேங்கியுள்ள மழைநீர்
சாலையில் தேங்கியுள்ள மழைநீர்pt desk

தூத்துக்குடி: சாலையில் தேங்கியுள்ள மழைநீர் - மாணவ மாணவிகள் அவதி

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் மாணவ மாணவிகள்;. மழை நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11, 12 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர்.

சாலையில் தேங்கியுள்ள மழைநீர்
சாலையில் தேங்கியுள்ள மழைநீர்pt desk
சாலையில் தேங்கியுள்ள மழைநீர்
புதுக்கோட்டை: அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் - கேள்விக்குறியான மாணவர்களின் பாதுகாப்பு

மேலும் மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பிறகும் மழைநீர் தேங்கியதால், அந்த மழை நீரில் கழிவு நீரும் கலந்து உள்ளது. இந்த தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ மாணவிகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை துரித நடவடிக்கை கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com