தீபாவளிக்கு விருந்து படைக்க காத்திருக்கும் வான்கோழிகள்

தீபாவளிக்கு விருந்து படைக்க காத்திருக்கும் வான்கோழிகள்

தீபாவளிக்கு விருந்து படைக்க காத்திருக்கும் வான்கோழிகள்
Published on

தீபாவளி பண்டிகையில் அசைவ பிரியர்களுக்காகவே வான்கோழிகள் தயாராகி வருகின்றன. பண்டிகைக்காக குவியும் ஆர்டர்களால் வான்கோழி வளர்ப்பவர்களும், உணவக உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு அசைவ உணவு தயாரிப்பது பல குடும்பங்களில் வழக்கமாக இருக்கிறது. ஆடு, கோழி இறைச்சிகளுக்கு அடுத்தபடியாக வான்கோழி பிரியாணியும் அண்மைக்காலங்களில் வரவேற்பு பெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சராசரியாக 100 முதல் 130 வான்கோழிகள் இறைச்சிக்காக விற்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்காக 1000-க்கும் மேற்பட்ட வான்கோழிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகபடியான ஆர்டர்கள் குவிந்து வருவதாக, வான்கோழி வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் எனில் வான்கோழி பிரியாணி ஆர்டர்களுடன் உணவகங்களும் தயாராகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று வாடிக்கையாளர்கள் வான்கோழி பிரியாணி கேட்பதால் தீபாவளி நாளில் ஸ்பெசலாக, ஆர்டர்கள் வாங்கி வான்கோழி பிரியாணி செய்து தருவதாக பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையில் அசைவ பிரியர்களுக்கு, வான்கோழிகள் நல்ல விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com