நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து: டிடிவி தினகரன்

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து: டிடிவி தினகரன்
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து: டிடிவி தினகரன்

நீட் தேர்வுக்கு எதிராக நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நாளை சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனிடையே நீட் தேர்வுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


முன்னதாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், " நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஆர்ப்பாட்டம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com