ஐந்து மாநில தேர்தல் வெற்றிகள் அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கான எதிர்ப்பை காட்டுவதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி மாவட்ட நிர்வாகிளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி, அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தார்.