தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அமமுக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “வழக்கறிஞராக பணியாற்றிய ராசா இன்று புரட்சித் தலைவரைப் பார்த்து வாய் கூசும் அளவிற்கு பேசுகிறார். MGR-ஐ பற்றி பேச ஆ.ராசாவுக்கு தகுதி இருக்கிறதா? இன்னொருபக்கம், இவர் செய்வதைக் கண்டித்து பழனிசாமி கூட்டம் போடுகிறார்.
தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் சட்டத்திட்டத்தை மாற்றி இயக்கத்தை கபளீகரம் செய்துள்ள பழனிசாமி, எப்படியாவது தன்னை தொண்டர்களாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டம் செய்கிறார்” என தெரிவித்துள்ளார்.