பெருங்குடி ரயில் நிலையத்தில் குடிபோதையில் கொலை முயற்சி

பெருங்குடி ரயில் நிலையத்தில் குடிபோதையில் கொலை முயற்சி
பெருங்குடி ரயில் நிலையத்தில் குடிபோதையில் கொலை முயற்சி

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி ஒன்று நடந்துள்ளது.

பெருங்குடி கல்லுக்கோட்டை பகுதியை சேர்ந்த புருசோத், மணி மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து பெருங்குடி ரயில் நிலையத்தில் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் புருசோத்தும், மணியும் சேர்ந்து குமாரை மதுபாட்டிலால் தாக்கியிருக்கின்றனர். அங்கிருந்து தப்பிய குமார் டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு ஓடியிருக்கிறார். துரத்தி வந்த இருவரும் அங்கு வைத்து உடைந்த பாட்டிலால் குமாரை குத்தியிருக்கின்றனர்.

மக்கள் கூடியதை அடுத்து அங்கிருந்து புருசோத்தும், மணியும் தப்பியுள்ளனர். அருகில் இருந்த மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததோடு காவல் துறையினரையும் அழைத்தனர். இதனை அடுத்து குமார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிகழ்விடத்திற்கு அடையார் துணை ஆணையர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com