திருச்சி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கிணற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
DEAD IMAGE
DEAD IMAGEPT WEP

செய்தியாளர்: லெனின்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (21). இவர் திருச்சி கேர் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பை விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சக்தி பிரகாஷ் சக மாணவர்களுடன் சேர்ந்து பூங்குடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து அருகில் இருந்த கிணற்றில் இறங்கி மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர்.

Rescued
Rescuedpt desk

அப்போது எதிர்பாராத விதமாக சக்தி பிரகாஷ் நீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறை வீரர்கள், கிணற்றில் இருந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, சக்தி பிரகாஷை சடலமாக மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com