திருச்சி: வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சி: வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சி: வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

திருச்சியில் வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி, ஏர்போர்ட் ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். கார் ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் வீட்டின் அருகே உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

அந்த பகுதியில் இவரது 5 வயது மகள் பாண்டி ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 5 அடி ஆழமுள்ள மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை அறியாத குடும்பத்தினர் பாண்டி ஸ்ரீயை தேடியுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பின்பு, பள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து திருச்சி ஏர்போர்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com