“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருச்சி அருகே தற்கொலைக்கு முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 23-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாணவி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவி 6 மாத கர்ப்பம் ஆக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியை உயிர் பிழைக்க வைக்க வேண்டுமெனில் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதனடிப்படையில் மாணவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவை அகற்றினர். ஆனாலும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com