ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளிடம் பழங்கள் பெற்று முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்களுக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா வழங்கினார்.
ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அவர்களிடம் இருந்து பழங்களை மொத்தமாக விலைக்கு பெற்று, முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்களுக்கு, உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தோடு இணைந்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா வழங்கினார்.
தனது சரகத்திற்கு உட்பட்ட கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாந்தி வனம் இல்லத்தில் தங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு அளித்த ஆனி விஜயா, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழங்கள், நீம் சோப், உணவுப் பொருட்கள் வழங்கினார்.