போலிஸைக் கடித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட அஜித் ரசிகர்கள்!

போலிஸைக் கடித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட அஜித் ரசிகர்கள்!
போலிஸைக் கடித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட அஜித் ரசிகர்கள்!

வெடி வெடித்து போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ரசிகரை கண்டித்த போலீசாரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம், லால்குடி அன்பு சினிமா தியேட்டரில் நேற்று வெளியானது. இந்த படத்தை காண அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து உற்சாகத்தின் வெளிப்பாடாக சினிமா தியேட்டரின் முன்புறமுள்ள ரயில்வே மேம்பால அணுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கார இருந்த போலீசார், வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தும், மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்தனர். அப்போது அந்த இரு இளைஞர்களும் சுரேஷ் என்ற போலீசாரின் கையை கடித்து காயப்படுத்தினார்.

இதில் காயம் அடைந்த சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து போலீசார் சுரேஷை கடித்த டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இரு அஜித் ரசிகர்களையம் லல்குடி போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com