அலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம் 

அலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம் 

அலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம் 

திருச்சியில் நகைக் கடையில் கொள்ளையர்கள் திருடியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு கொள்ளை அடித்தது வடமாநிலக் கொள்ளையர்கள்தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். 

7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருநாள்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நகைக் கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த போது பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், முகமூடி அணிந்திருந்த கொள்ளையன் ஒருவன் ஒவ்வொரு நகையாக எடுத்து பேக்கில் வைப்பது போல் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com