Couplept desk
தமிழ்நாடு
திருச்சி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோகம்! மரணத்திலும் பிரியாத இணையர்!
திருவெறும்பூர் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கணேசன் (80). உடல் நலமின்றி இருந்த கணவர் கணேசனை, இவரது மனைவி கண்ணம்மாள் (70) உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.
DeathFile Photo
இந்நிலையில், நேற்று மதியம் கணேசன் உயிரிழந்த நிலையில், அதனை அருகில் இருந்து பார்த்த மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரது உடலையும இன்று திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்ய உள்ளனர்.