துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருச்சி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம் பகுதியிலுள்ள சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் வயது 31. இவர் தனது வீட்டருகே துப்பாக்கிச் சுடும் கிளப் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் துப்பாக்கி சத்தம் கேட்டதாக திருச்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

கிடைத்த தகவலின் பேரில் ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது துப்பாக்கியால் நெற்றியில் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சசிகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி கிளப் நடத்தி வரும் இவருக்கு ஒரிஜினல் துப்பாக்கி கிடைத்தது எப்படி? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது துப்பாக்கியால் சுட்டதால் உயிர் இழந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com