”அந்த நிறுவனம் கொடுத்த நெருக்கடிதான் காரணம்” - கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!

திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
William Hendry
William Hendry pt desk

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் வில்லியம் ஹென்றி (30). திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அக்கௌன்ட் மேனேஜராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காய்ச்சல் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

letter
letterpt desk

இந்நிலையில், வேலைக்குச் சென்ற தந்தை ஆரோக்யராஜ் தாயார் மெர்சி ராணி ஆகிய இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்துள்ளனர். அப்போது, வில்லியம் ஹென்றி தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வில்லியம் ஹென்றி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இறந்து போன வில்லியம் ஹென்றி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கட்ட முடியாமல் அந்நிதி நிறுவனத்தின் வசூல் அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com