திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயது மகள் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். தாய் தந்தை பிரிந்து வாழ்வது வரும் நிலையில், மாணவி திருச்சியில் அம்மாவுடன் வசித்து வருகிறார். எப்போதும் போல நேற்று காலையும், மாணவியின் தாய் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கதவை தட்டிய போது, மகள் கதவை திறக்கவில்லை. பின்பு சந்தேகத்தின்பேரில் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்திருக்கிறார். அப்போது தனது மகள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.