திருச்சி: தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து... துண்டானது இளைஞரின் கால்

திருச்சி: தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து... துண்டானது இளைஞரின் கால்
திருச்சி: தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து... துண்டானது இளைஞரின் கால்

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையிலிருந்து தென்காசி சென்ற ஆம்னி பேருந்து (சக்தி டிராவல்ஸ்) திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சக்தி என்ற இளைஞருக்கு கால் துண்டானது. அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் பயணிகளை மீட்காமல் ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.

தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com